வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (13:54 IST)

சென்னையில் திடீர் நில அதிர்வு?? – மக்கள் பரபரப்பு!

தலைநகர் சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் முக்கிய பகுதிகளான பெசண்ட் நகர், ஆழ்வார்பேட்டை ஆகிய முக்கியமான சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் சென்னையிலிருந்து 320 கி.மீ தொலைவில் 5.1 ரிக்டர் அளவில் வங்க கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.