Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படம் பார்த்து கெட்டுப்போன காதல் ஜோடி: முட்டாள் தனமான முடிவை எடுத்த அவலம்...

Updated: வியாழன், 11 ஏப்ரல் 2019 (15:11 IST)
தங்களின் காதல் புனிதமானது என நிரூபிக்க காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த பிரேம்நாத் என்ற வாலிபர் ஆயிஷா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இரண்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் சமீபத்தில் தங்களின் காதல் விஷயத்தை பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதற்கு இவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது வயசு கோளாறு படிப்பை பாருங்கள் என அட்வைஸ் செய்துள்ளனர்.
 
இதனால் மனமுடைந்த பிரேம்நாத், தனது காதல் புனிதமானது என்பதை நிரூபிக்க தற்கொலை செய்ய முடிவு செய்தார். இறப்பதற்கு முன்னர் தனது காதலிக்கு வீடியோ கால் மூலம் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
இதனால் ஆயிஷாவும் துக்கம் தாளாமல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். காதலிப்பது தவறில்லை. பெற்றோர்கள் பிள்ளைகளின் காதலை ஏற்பதில்லை என்பதிலும் தவறில்லை. ஏனென்றால் நாம் அன்றாடம் பல காதல் ஜோடிகளின் பிரச்சனைகளை பார்க்கிறோம். எங்கே நம் பிள்ளை எதாவது பிரச்சனையில் மாட்டிக்கொள்ளப்போகிறார்களோ என்ற பயம் தான் பெற்றோர்களுக்கு...
 
காதலை ஏற்கவில்லை என்றால் பெற்றோர்களுக்கு தங்களின் காதலை புரிய வைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இந்த மாதிரியான தற்கொலை முடிவெடுப்பதால் யாருக்கு என்ன பயன்? காதலை தாண்டி வாழ்க்கையில் நிறைய விஷயம் இருக்கிறது. ஏன் இதனை புரிந்துகொள்ளாமல் பல பிள்ளைகள் பெற்றோர்களை கஷ்டப்படுத்துகிறார்களோ?....

எல்லாம் காட்டு

பிரேமலதாவும், சுதீஷும் நல்ல பெர்ஃபார்ம் பண்றாங்க!.. ChatGPT சொல்லுது!.. சிரிக்க வைக்கும் தேமுதிக!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

காவிரி நீரை பெற தமிழகத்துக்கு சட்டப்படி உரிமை உண்டு!.. ஆனால்!.. டி.கே.சிவக்குமார் பேச்சு!..

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு!.. தமிழர்கள் உட்பட 400 பேர் மாயம்!...

உதயநீதி மீண்டும் கைது செய்யப்படுவாரா?!... மகளிர் ஆணையம் அதிரடி நடவடிக்கை....

அடுத்த கட்டுரையில்
Show comments