சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்.. முழு விவரங்கள்..!

ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (16:07 IST)
நாளை ஆயுத பூஜை திருநாளை முன்னிட்டு நாளைய சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தெற்கு ரயில்வே சார்பில் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் வழக்கமாக பொது விடுமுறை நாட்களில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்குவது வழக்கம். 
 
அந்த வகையில் நாளை திங்கட்கிழமையாக இருந்தாலும் ஆயுத பூஜை விடுமுறை என்பதால் சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். 
 
சென்ட்ரல் - அரக்கோணம்,  சென்ட்ரல் - சூளூர்பேட்டை, கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் விரைவு மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

விஜய் அமைச்சரவை நாளை விரிவாக்கம்!.. விசிக, ஐ.யூ.எம்.எல். இடம் பெறுமா?..

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து!.. விரைவில் விடுதலை?!.. தமிழக அரசு அதிரடி!..

மத்திய அரசை விரைவில் கவிழ்ப்போம்.. மம்தா பானர்ஜியின் அதிரடி சபதம்!

காற்றிலிருந்து பெட்ரோல், டீசல் தயாரிக்கும் தொழில்நுட்பம்.. சக்சஸ் ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.10?

எரிபொருள் விலை உயர்வு!. Swiggy, Zomato கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு!...

அடுத்த கட்டுரையில்
Show comments