சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்.. முழு விவரங்கள்..!

ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (16:07 IST)
நாளை ஆயுத பூஜை திருநாளை முன்னிட்டு நாளைய சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தெற்கு ரயில்வே சார்பில் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் வழக்கமாக பொது விடுமுறை நாட்களில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்குவது வழக்கம். 
 
அந்த வகையில் நாளை திங்கட்கிழமையாக இருந்தாலும் ஆயுத பூஜை விடுமுறை என்பதால் சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். 
 
சென்ட்ரல் - அரக்கோணம்,  சென்ட்ரல் - சூளூர்பேட்டை, கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் விரைவு மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

100 கோடி நிலம் விவகாரம்!.. எல்லாமே பொய்... அமைச்சர் ரமேஷ் விளக்கம்!..

ஆட்சிக்கு ஆதரவாக திரையுலகினரை வைத்து விளம்பரம்!.. தவெக போடும் ஸ்கெட்ச்!..

பெண்கள் அந்தரங்க வீடியோ!.. நாகர்கோவில் காசிக்கு வாழ்நாள் சிறை உறுதி!..

கல்யாணத்தை நிறுத்த மொட்டையா?!.. இளம்பெண்ணை திட்டி தீர்த்த நெட்டிசன்ஸ்!.. வீடியோ உள்ளே

விசாரணைக்கு வரேன்!. ஆனா அரெஸ்ட் பண்ணக்கூடாது!.. காவல்துறைக்கு செந்தில் பாலாஜி கடிதம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments