சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்.. முழு விவரங்கள்..!

ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (16:07 IST)
நாளை ஆயுத பூஜை திருநாளை முன்னிட்டு நாளைய சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தெற்கு ரயில்வே சார்பில் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் வழக்கமாக பொது விடுமுறை நாட்களில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்குவது வழக்கம். 
 
அந்த வகையில் நாளை திங்கட்கிழமையாக இருந்தாலும் ஆயுத பூஜை விடுமுறை என்பதால் சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். 
 
சென்ட்ரல் - அரக்கோணம்,  சென்ட்ரல் - சூளூர்பேட்டை, கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் விரைவு மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

12 வயது மாணவி ஆரம்பித்த ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனம்.. 3 நாடுகளில் வாடிக்கையாளர்கள்...

தவெக இருக்கும் கூட்டணியில் திமுக இருக்காது: திருமாவளவன் யோசனை நிராகரிப்பு...!

35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய 1000 ரூபாய் கடன்.. வட்டியுடன் சேர்த்து நண்பருக்கு கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?

அவனுக்கு ஒன்னும் தெரியாது!... மீண்டும் விஜயை அட்டாக் பண்ணிய அனிதா ராதார்கிருஷ்ணன்..

வணிக கப்பல் மீது ஈரான் தாக்குதல்.. கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் மீட்பு..ஒருவரை காணவில்லை...

அடுத்த கட்டுரையில்
Show comments