நெஞ்சுவலி ஏற்பட்ட போதிலும், பயணிகளை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்! மருத்துவமனையில் அனுமதி..!

Written By Mahendran
Updated: வெள்ளி, 10 நவம்பர் 2023 (16:42 IST)
பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட போதிலும் தன்னை நம்பி வந்த பயணிகளை காப்பாற்ற வேண்டும் என்று தீவிர முயற்சி எடுத்த பேருந்து ஓட்டுனருக்கு  பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
 புதுக்கோட்டையில் அரசு பேருந்து ஓட்டு சென்ற ஓட்டுனர் வீரமணி என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அடுத்தடுத்து இரண்டு முறை நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவர்  புத்திசாலித்தனமாக பேருந்து நிறுத்தி பயணிகளை காப்பாற்றி உள்ளார். 
 
முதல் முறை நெஞ்சுவலி ஏற்பட்ட போது மருந்தகத்தில் மருந்து வாங்கி சாப்பிட்டு விட்டு மீண்டும் பேருந்தை அவர் இயக்கிய நிலையில் சில மணி நேரத்தில் மீண்டும் நெஞ்சுலி ஏற்பட்டது. 
 
இதனை அடுத்து அவர் பேருந்து ஓரமாக நிறுத்திவிட்டு பயணிகளை வேறு பேருந்தில் செல்லுமாறு கூறிவிட்டு அவரே நேராக மருத்துவமனையில் சென்று சிகிச்சை எடுத்து கொண்டார் அவருக்கு தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

செப்டம்பர் மாதம் அமெரிக்க அரசு முடங்க போகிறதா? பைத்தியக்காரர்கள் என டிரம்ப் விமர்சனம்...

இந்தியாவில் 1500க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அமெரிக்க தமிழர் கைது.. பிடிபட்டது எப்படி?

தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: கரப்பான் பூச்சி கட்சி அறிவிப்பு..

அப்பா அம்மாவுடன் ஜனநாயகன் படம் பார்த்த முதல்வர் விஜய்.. அதிகாரிகளும் பார்த்ததாக தகவல்..

உறுதி அளித்தால் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இருக்கிறேன்- சோனம் வாங்சுக்

அடுத்த கட்டுரையில்
Show comments