பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தபோது டிரைவருக்கு திடீர் மாரடைப்பு: 50 பயணிகள் தப்பினர்!

வியாழன், 9 டிசம்பர் 2021 (08:07 IST)
மதுரையில் பேருந்து ஓட்டுனர் ஒருவர் ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த பேருந்தில் பயணம் செய்த 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர் 
 
மதுரை காளவாசல் பகுதியில் இன்று காலை அரசு பேருந்து ஒன்று 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த நிலையில் அந்த பேருந்தை ஓட்டுனர் ஆறுமுகம் என்பவர் ஓட்டிக் கொண்டிருந்தார்.
 
இந்த நிலையில் திடீரென ஓட்டுனர் ஆறுமுகத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது இதனை அடுத்து அவர் சாமர்த்தியமாக பேருந்தை ஓரமாக நிறுத்தினார்
 
பயணிகள் அனைவரும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்த போது வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது 
 
மாரடைப்பு ஏற்பட்ட போதிலும் சாமர்த்தியமாக பேருந்தை ஓட்டுனர் ஆறுமுகம் நிறுத்தியதால் அந்த பேருந்தில் பயணம் செய்த 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது

எல்லாம் காட்டு

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments