சென்னையில் பேருந்து ஓட்டுனரை தாக்கிய மாணவர்கள்: காவல்துறை சமாதானம்

திங்கள், 16 மே 2022 (16:04 IST)
சென்னையில் பேருந்து ஓட்டுனரை தாக்கிய மாணவர்கள்: காவல்துறை சமாதானம்
சென்னையில் பேருந்து ஓட்டுனரை மாணவர்கள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது அதில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஏறினார்கள். அப்போது படிக்கட்டில் நிற்க வேண்டாம் என மாணவர்களை பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கூறினார் 
 
இதுகுறித்து வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து பேருந்து ஓட்டுனரை திடீரென மாணவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த பகுதியில் சென்ற அனைத்து பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தி விட்டு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
 
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

எல்லாம் காட்டு

பனையூர் கேட் எப்போது திறக்கும் என்று ஏங்கி பார்த்து கொண்டு நிற்கிறார்கள்: கேபி முனுசாமி கண்டனம்...

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக பொருட்கள்: மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்..

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. மேலும் ஒருவர் கைது.. கைது எண்ணிக்கை 9 ஆக உயர்வு...

சீமான், உதயநிதி திடீர் சந்திப்பு.. சீமான் கையை பிடித்து நாற்காலியில் உட்கார வைத்த உதயநிதி...

குதிரை பேரம் குறித்து விசாரிக்க அதிகாரம் இருந்தால் ஆளுனர் விசாரிக்க வேண்டும்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments