கத்திரிக்காய் விலை வீழ்ச்சி.. டிராக்டரை வைத்து செடியை அழிக்கும் விவசாயிகள்..!
கத்திரிக்காய் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. மொத்த கொள்முதல் சந்தையில், ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.6 முதல் ரூ.7 வரை மட்டுமே விற்பனை ஆகுவதால், விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.
நடவு, மருந்து, நீர், காய்கறி பறிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் செலவுகளுக்கு கூட விலை கிடைக்காமல் இருப்பதால், விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். வாகனச் செலவு கூடுதலாக உள்ளதால், சிலர் கத்திரிக்காய் செடிகளை தோட்டத்திலேயே டிராக்டர் வைத்து அழித்துவருகிறார்கள்.
கத்திரிக்காய் விலை சரிவால், மூன்று மாதமாக கடினமாக உழைத்த பயிர்களை அழிக்க நேர்ந்த நிலை, விவசாயிகளுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தற்போது, கத்திரிக்காய் விலை ரூ.10 முதல் ரூ.12 வரை மட்டுமே உள்ளது.
இதனால், அரசு தலையிட்டு, விவசாயிகளுக்கு உரிய விலை வழங்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
Edited by Siva