இத்தன தொகுதில ஜெய்க்கனும், இல்லனா ஆட்சிக்கு ஆப்புதான்: டார்கெட் ஃபிக்ஸ் பண்ண அதிமுக!

சனி, 3 நவம்பர் 2018 (12:48 IST)
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அதிமுகவிற்கு சதகமாக வந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளும் தயார் என கூறியுள்ளதால் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தற்போது தமிழக அரசியலை சூடுபிடிக்க செய்துள்ளது. 
 
இதனால், ஏற்கனவே காலியான 20 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக அரசு. இந்நிலையில் இன்று நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். 
 
இந்த ஆலோசனையின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த இடைத்தேர்தலின் போது அதிமுக 20 தொகுதிகளில் அதிக அளவு எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 
 
அதோடு, நிச்சயம் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் அப்படி இல்லை என்றால் ஆட்சிக்கு ஆபத்துதான் என கூறியுள்ளார். அதிகபட்ச தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என அதிமுக எண்ணினாலும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள நிச்சயம் 8 தொகுதிகளில் கட்டாய வெற்றி பெற வேண்டும். 

எல்லாம் காட்டு

ஒரு பக்கம் தொழிலாளர் ஏற்றி சென்ற இரண்டு பேருந்துகள் மண்ணில் புதைந்து போனது மேலும் சில தொழிலாளர்களும் நிலச்சரிக்கை சுற்றி இருக்கிறார்கள் அவர்கள் நிற்கும் படி நடைபெற்று வருகிறது அந்த பகுதியில் நிலை தேர்

தவெக அரசை கவிழ்க்க முயற்சித்த திருச்சி நரேஷ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. பரபரப்பு தகவல்...

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம்!.. ஆவணங்கள், பணம் பறிமுதல்!.. வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி தம்பி!..

ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு.. ரிஜிஸ்டர் அலுவலகம் வராமலே பத்திரம் பதியலாம்...

திமுக ஆட்சியில் 60000 டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர்.. தவெக அரசு அதிரடி ரத்து...

அடுத்த கட்டுரையில்
Show comments