அதிமுக வேட்பாளர் தென்னரசு: அவைத்தலைவர் அறிவிப்பால் வாபஸ் பெறும் ஓபிஎஸ் வேட்பாளர்!

Written By Mahendran
Updated: சனி, 4 பிப்ரவரி 2023 (12:35 IST)
திமுக வேட்பாளராக தென்னரசுவை அவை தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற இருப்பதாக தகவல் வழியாக உள்ளன. 
 
நேற்று சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக பொது குழு வழக்கு நடந்தபோது ஓ பன்னீர் செல்வம் தரப்பையும் அழைத்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் அந்த பொதுக்குழுவில் அதிமுக வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு அவைத்தலைவர் முன்மொழிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
 
 இந்த நிலையில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவிப்பதாக அவை தலைவர் சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விரைவில் கூட இருக்கும் பொதுக்குழுவிலும் இதனை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. 
 
இதனை எடுத்து ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற இருப்பதாகவும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற வேண்டும் என பாஜக அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
எனவே அதிமுக வேட்பாளராக போட்டியிடும் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதிலும் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

ஜனநாயகன் இன்று ரிலீஸ்!.. வெறிச்சோடிய தலைமை செயலகம்!...

அழகிரி மகள் கயல்விழி கோரிக்கை விஜய்யால் நிராகரிப்பு.. தவெகவில் சேரும் திட்டம் கேன்சலா?

ரோஹிணி தியேட்டர்ல்ல எதுக்கு நீட் போராட்டம் பண்ணனும்.. திமுகவுக்கு அரசியல் செய்ய வேற எதுவுமே கிடைக்கலையா?

சாதகமான நீதிமன்ற தீர்ப்பு.. 16 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பும் லலித் மோடி...

போராட்டக்காரர்களின் கையில் கத்தி, வாள், கட்டைகள்.. இவர்கள் எல்லாம் மாணவர்களா? தேசத்துரோகிகள் ஊடுருவலா?

அடுத்த கட்டுரையில்
Show comments