Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்! அவகாசம் இருக்காது என தகவல்..!

Written By Siva
Updated: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (07:59 IST)
மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த சில மாதங்களாக தமிழக அரசின் மின்சார துறை தெரிவித்து வருகிறது என்பதும் கோடிக்கணக்கான மின் எண்ணுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள் என்று கூறப்பட்ட நிலையில் அதன் பிறகு ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 14 ஆகிய நாட்கள் கடைசி நாட்களாக அவகாசம் நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் 28 வரை மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இனிமேல் மேல் கொண்ட அவகாசம் வழங்கப்படாது என்றும் தமிழக அரசின் மின்சார துறை தெரிவித்திருந்தது. 
 
அந்த வகையில் இன்று மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாள் என்பதால் இதுவரை இணைக்காதவர்கள் உடனடியாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும் அவகாசம் வழங்கப்படாது என்று மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்று உள்ளே
 
Edited by Siva

எல்லாம் காட்டு

எனக்கு சுகர்!... வேதனையா இருக்கு!.. சட்டசபையில் ஓபிஎஸ் வைத்த கோரிக்கை!...

விஜய் இருக்கும்வரை உங்க தலைவர் வரமாட்டார்!.. சட்டசபையில் காரசார வாக்குவாதம்!..

சாம் ஆல்ட்மேனின் வலது கரமாக கருதப்படும் முக்கிய அதிகாரி விலகல்.. ஓபன்ஏஐ' நிறுவனத்திற்கு பின்னடைவா?

இளைஞரை அறைந்த எஸ்.ஐ!.. திருப்பி அறைந்த இளைஞர்!.. விசிக போராட்டத்தில் பரபரப்பு!. (வீடியோ)..

முதல்வர் வரும் போது எழுந்து நிற்கவேண்டுமா?!.. சட்டமன்ற விதி சொல்வது என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments