Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிதை - பஞ்சுமிட்டாய்க்காரன்

Updated: புதன், 20 டிசம்பர் 2017 (15:48 IST)
கடலலை ஆரவாரித்தது போல
தெருவில் சிறார்களின் சப்தம்
வெளியே
பஞ்சுமிட்டாய்க்காரனைச் சுற்றி
வேடிக்கைப் பார்ப்பது போக
மிட்டாய் வாங்க போட்டிப் போட்டு
கையை நீட்டுவது ஒருபுறமாக 
 
அவன்
கையிலிருக்கும் கிலுகிலுப்பையை
ஆட்டியபடியே
நின்றுகொண்டிருக்க
 
அவனது
தலைப்பாகையையும் அழுக்கு
கந்தலாடையையும் கண்டு
தெரு நாய்கள்
குரைக்க குரைக்க அவன்
 
வியாபாரத்தில் குறியாக 
இருந்தான்
 
ஒரு ஏழைச்சிறுமி குறைந்த
காசை நீட்டியபோது அதை
வாங்காது
திருப்பிக் கொடுத்து
 
பஞ்சுமிட்டாயைக் கொடுத்து
கன்னத்தைக் கிள்ளி
பிளைன் கிஸ் தந்து
நகர்ந்ததைக் கண்டு
 
யாரும்
ஆச்சர்யப்படாமலில்லை
 
அந்த
பஞ்சுமிட்டாயின் சிவப்பு
நிறத்தைப் போலவே
அவனது வறுமையின் நிறமும்
தெரிந்துகொண்டிருந்தது
தொலைவில்....
 
- கோபால்தாசன்

எல்லாம் காட்டு

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments