திங்கள், 17 பிப்ரவரி 2025
Choose your language
हिन्दी
English
தமிழ்
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
Follow us
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
பல்சுவை
இலக்கியம்
கவிதைகள்
Written By
Sasikala
Last Updated :
சனி, 13 மே 2017 (15:36 IST)
கவிதை - அம்மா
அம்மா
பொத்தி பொத்தி
வளர்த்தவளே !
உன்
புடவை பிடித்து
சுத்தி சுத்தி
வந்த நாட்கள்
இன்று
எட்டி எட்டிப்
பார்கின்றது - என்
எழுதுகோல் வழியாக....
நினைவுகள்
சரிய சரிய
கண்ணீர் துளி
கசிய கசிய
பழைய நினைவுகள்
பம்பரமாய் சுழல சுழல
மனதிற்குள்
நிறப்பிரிகை நிகழ்கின்றது....
அம்மா
உன்
கைப்பட்டதால் தானே
கடுகுக்கும்
கருவேப்பிலைக்கும்
சுவை கூடியது.
உன்
வெகுளி தனத்திடம்
தோற்றுத்தானே
வெள்ளை நிலவு
தலை குனிந்தது.
அறிவுக்கெட்டவளே
என்று அடிக்கடி
திட்டும் அப்பாதானே
உன்னிடமே
ஆலோசனை கேட்டது.
அம்மாவை
படைத்துவிட்டுதானே
பிரம்மனால்
சொர்கத்தை
படைக்க முடிந்தது.
நீ
கற்றுத்தந்த
தமிழ்தானே
இந்த வெள்ளைத்தாளுக்கு
வண்ணம் பூசிக்கொண்டிருக்கிறது....
அன்பை
அணு அணுவாய்
அனுபவிக்க
அம்மா மடி மட்டுமே
உத்திரவாதம்!
அம்மாவிற்கு நிகர்
அன்னை !
அன்னைக்கு நிகர்
தாய் !
தாய்க்கு நிகர்
அம்மா !
உலக
ஒட்டுமொத்த
ஆராய்ச்சி மையம்
இன்றுவரை
தோற்றுக்கொண்டே
இருக்கிறது
உன் அன்பிற்கு
ஈடாய்
என்ன இருக்குமென்று ....
அம்மா
இன்று
நானும் ஒரு தாய்.
இப்போதும்
நான் தேடும்
ஒரே சொர்கம்
நீ மட்டும் தான்....
மீண்டும்
உன்
கருவறைக்குள்
எனக்கோர்
இடம் கிடைக்குமா?....
- த.நா. பரிமளச்செல்வி
வெப்துனியாவைப் படிக்கவும் :
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தலைமுடி வளர என்னென்ன வைட்டமின்கள் தேவை?
முடி உதிர்தல் இன்று அதிகரித்து வரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு. முடி ஆரோக்கியமாக வளர உணவில் தேவையான வைட்டமின்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்
தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் இருக்கும் நிலையில் அவற்றில் சிலவற்றை தற்போது பார்ப்போம்,
வயதானவர்களை பாதிக்கும் கால் மூட்டு கீல்வாதம்.. அறிகுறிகள் என்ன?
கால் மூட்டுகளில் ஏற்படும் காயங்கள் காரணமாக வீக்கம், வலி உருவாகிறது. இந்த காயங்கள் மூட்டுகளில் உள்ள தசைகள், எலும்புகள், இணைபுள்ளிகள் மற்றும் இணைப்புக்கயிறுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பொதுவாக, இரு கால் மூட்டுகளில் ஏற்படும் வலி பெரும்பாலும் கீல்வாதத்தால் வருகிறது. இது குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்களை அதிகமாக பாதிக்கிறது.
காதுகளில் எறும்பு, பூச்சி புகுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?
காதுக்குள் எறும்பு அல்லது பூச்சிகள் புகுந்துவிட்டால் பெரும் தொந்தரவாக இருந்தாலும், அதைவிட இது ஒரு வகையான அச்சத்தையும் ஏற்படுத்தும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
ஆண்களுக்கு பிரச்சனை தரும் `ப்ராஸ்டேட் வீக்கம்'... குணமாக என்ன செய்ய வேண்டும்?
ஆண்களுக்கு மட்டுமே காணப்படும் ஒரு முக்கியமான சுரப்பியாக 'ப்ராஸ்டேட்' அழைக்கப்படுகிறது. இதை தமிழில் 'சுக்கிலச் சுரப்பி' என்றும் கூறுவர். இது சுமார் பாதாம் விதையின் அளவில் ஒரு சிறிய சுரப்பி ஆகும். ஆண்களின் அடிவயிற்றில், மூத்திரப்பைக்கும் ஆணுறுப்புக்கும் இடையில் அமைந்திருக்கிறது.
வீடியோ
மேலும் வீடியோக்கள்