செவ்வாய், 17 மார்ச் 2026
Choose your language
हिन्दी
English
தமிழ்
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
Follow us
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
பல்சுவை
இலக்கியம்
கவிதைகள்
Written By
Sasikala
Last Updated :
சனி, 13 மே 2017 (15:36 IST)
கவிதை - அம்மா
அம்மா
பொத்தி பொத்தி
வளர்த்தவளே !
உன்
புடவை பிடித்து
சுத்தி சுத்தி
வந்த நாட்கள்
இன்று
எட்டி எட்டிப்
பார்கின்றது - என்
எழுதுகோல் வழியாக....
நினைவுகள்
சரிய சரிய
கண்ணீர் துளி
கசிய கசிய
பழைய நினைவுகள்
பம்பரமாய் சுழல சுழல
மனதிற்குள்
நிறப்பிரிகை நிகழ்கின்றது....
அம்மா
உன்
கைப்பட்டதால் தானே
கடுகுக்கும்
கருவேப்பிலைக்கும்
சுவை கூடியது.
உன்
வெகுளி தனத்திடம்
தோற்றுத்தானே
வெள்ளை நிலவு
தலை குனிந்தது.
அறிவுக்கெட்டவளே
என்று அடிக்கடி
திட்டும் அப்பாதானே
உன்னிடமே
ஆலோசனை கேட்டது.
அம்மாவை
படைத்துவிட்டுதானே
பிரம்மனால்
சொர்கத்தை
படைக்க முடிந்தது.
நீ
கற்றுத்தந்த
தமிழ்தானே
இந்த வெள்ளைத்தாளுக்கு
வண்ணம் பூசிக்கொண்டிருக்கிறது....
அன்பை
அணு அணுவாய்
அனுபவிக்க
அம்மா மடி மட்டுமே
உத்திரவாதம்!
அம்மாவிற்கு நிகர்
அன்னை !
அன்னைக்கு நிகர்
தாய் !
தாய்க்கு நிகர்
அம்மா !
உலக
ஒட்டுமொத்த
ஆராய்ச்சி மையம்
இன்றுவரை
தோற்றுக்கொண்டே
இருக்கிறது
உன் அன்பிற்கு
ஈடாய்
என்ன இருக்குமென்று ....
அம்மா
இன்று
நானும் ஒரு தாய்.
இப்போதும்
நான் தேடும்
ஒரே சொர்கம்
நீ மட்டும் தான்....
மீண்டும்
உன்
கருவறைக்குள்
எனக்கோர்
இடம் கிடைக்குமா?....
- த.நா. பரிமளச்செல்வி
வெப்துனியாவைப் படிக்கவும் :
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?.. வாங்க பார்ப்போம்!..
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களை ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்கிற விதிமுறை இருக்கிறது.
முடி கொட்டாமால் இருக்க என்ன செய்யவேண்டும்?.. வாங்க பார்ப்போம்!...
இப்போதெல்லாம் ஆண்கள், பெண்கள் என பலருக்குமே தலை முடி கொட்டுவது என்பது ஒரு பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது..
மூட்டு வலியை போக்க சிறந்த உணவுகள்!. முயற்சி பண்ணி பாருங்க!..
பொதுவாகவே 40 வயதை தாண்டிவிட்டாலே பலருக்கும் மூட்டு வலி வந்து விடுகிறது.
இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...
உலகமெங்கும் உள்ள மக்கள் இளநீரை விரும்பி குடிக்கிறார்கள்.
14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...
கடந்த பல வருடங்களாகவே மது அருந்துபவர்கள் மற்றும் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
வீடியோ
மேலும் வீடியோக்கள்