குடியரசுத் தலைவர் வேட்பாளராக தம்மை தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இது பெண்ணுரிமையை நிலைநாட்டும் தூண்டுகோலாக அமையும் என்றும் பிரதீபா பாட்டீல் தெரிவித்துள்ளார்.ஐக்கிய முற்போக்கு, இடது சாரிகள் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராஜஸ்தான் மாநில ஆளுநர் பிரதீபா பாட்டீல் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிரதீபா பாட்டீல் இன்று டெல்லி வந்தார்.அங்கு அவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து குடியரசுத் தலைவர் வேட்பாளராக தம்மை...