நேபாளத்தில் இன்று 4.3 ரிக்டர் அளவிற்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சேதம் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. இமயமலை நாடான நேபாளத்தின் மேற்குப் பகுதியில் இன்று மதியம் 1 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பக்லுங் மாவட்டத்தில் உள்ள சியான்தண்டா என்ற இடத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.3 ஆகப் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத்...