மரபணு மாற்றத்தால் கால்நடைகளும் அழிந்து வருகின்றன என்று இயற்றை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பு சார்பில் நுகர்வோருக்கான கருத்தரங்கம் ஈரோட்டில் நடந்தது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமை தாங்கிப்பேசினார் அப்போது அவர் கூறியதாவது, நாட்டில் தற்போது இயற்கை விவசாயம் மாறி, ரசாயனம், பூச்சி மருந்து இவற்றால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் 30 வினாடிக்கு ஒரு விவசாயி...