Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள் என்ன...?

Written By Sasikala
Updated: சனி, 23 ஏப்ரல் 2022 (15:50 IST)
கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்தும், அமினோ அமிலங்களும் இந்த கீரைகளில் நிரம்பியுள்ளன. அதிலும் குறிப்பாக முருங்கைக் கீரையும், பொன்னாங்கண்ணிக் கீரையும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மிகச் சிறந்த மருந்துகளாகும்.


பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ சத்து அதிக அளவில் உள்ளது. இது உங்கள் கண் பார்வை ஆரோக்கியத்திற்கு பெரிதும் பங்களிக்கிறது. எனவே ஆரோக்கியமான கண்கள் மற்றும் தெளிவான கண் பார்வையை பெற தினமும் பாதாம் சாப்பிடுங்கள்.

சிட்ரஸ் வகை பழங்களான திராட்சை பழம், ஆரஞ்சு பழம், எழுமிச்சை பழம் ஆகிய மூன்று பழங்களும் உங்கள் கண்களின் விழித்திரையை ஆரோக்கிய படுத்துவதற்கு மிகவும் உதவுகிறது. இந்தப் பழங்களில் வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ளது. வயது சார்ந்த கண் குறைபாடுகள் வராமல் காத்துக்கொள்ளவும் இந்தப் பழங்களை தொடர்ந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

கேரட்டில் கண்களுக்கு ஆரோக்கியம் தரும் பீட்டா கரோட்டினும், வைட்டமின் ஏ சத்தும் நிரம்பியுள்ளன. எனவே கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவது கண் பார்வையை அதிகரிக்கவும், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மிகவும் உறுதுணையானது.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மீன்களில் நிரம்பியுள்ளன. இது உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக்கூடியதாகும்.  கண்களில் வறட்சித் தன்மை வராமல் பாதுகாத்துக் கொள்ளவும், அதுமட்டுமின்றி கண்புரை நோய் நம்மை நெருங்காமல் காத்துக் கொள்ளவும் மீன்களில் உள்ள இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நமக்கு உதவுகிறது.

வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் இ, வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இது உங்கள் கண் பார்வையை தெளிவுபெற செய்ய மிகவும் உதவுகிறது. வால்நட் மட்டுமின்றி பாதாம், பிஸ்தா, நிலக்கடலை உள்ளிட்ட கொட்டை வகைகளிலும் உங்கள் கண் பார்வையை அதிகரிப்பதற்கான சத்துக்கள் ஏராளம் உள்ளன.

எல்லாம் காட்டு

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

30 வயதுக்கு மேல் சாப்பிட வேண்டிய உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments