தொடர் இருமலை கட்டுக்குள் வைக்க உதவும் திப்பிலி !!

இளைப்பு நோய் கட்டுக்குள் கொண்டுவர திப்பிலிப் பொடி கடுக்காய் பொடியை சம அளவு எடுத்து தேனில் குழைத்து காலை மாலை குடித்து வந்தால் இளைப்பு நோய் குறையும்.

வீட்டில் சுக்கு, மிளகு இருப்பது போல திப்பிலியும் இருந்தால் நுரையீரல் பாதுகாப்பாக இருக்கும்.
 
திப்பிலி பொடியை கால் ஸ்பூன் எடுத்து கம்மாறு வெற்றிலை வைத்து தேன் கலந்து சாப்பிட காய்ச்சல் கோழை இருமல் விலகும் ஐந்து முதல் பத்து நாட்கள் இதை செய்ய வேண்டும்.
 
சிலருக்கு தீராத விக்கல் இருக்கும் அவர்கள் திப்பிலி 10 கிராம் சீரகம் 10 கிராம் லேசாக வறுத்து கஷாயம் செய்து தேன் கலந்து குடித்து வர நீண்ட நேர விக்கல் உடனே நிற்கும்.
 
சிலருக்கு உடலில் தேமல் இருக்கும் அது மறைய திப்பிலியை தூள் செய்து அத்துடன் வில்வ இலை பொடி அரை ஸ்பூன் கலந்து தேனுடன் காலை மாலை சாப்பிட்டு வர தேமல் மறைந்து ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிடவும்.  
 
திப்பிலி 100 கிராம் கரிசலாங்கண்ணி இலை 1 பிடி எடுத்து இடித்து 500 மில்லி நீரில் போட்டு காய்ச்சி சுண்டிய பின் அடியில் நீக்கும் திப்பிலி கரிசாலை  வறுத்து பொடி செய்து அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து காலை மாலை அரை டீஸ்பூன் எடுத்து சாப்பிட்டால் இருமல் உடனே குணமாகும்.

எல்லாம் காட்டு

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments