சருமத்தை பொலிவோடு வைக்க உதவும் எலுமிச்சை சாறு...!!

Written By Sasikala
Updated: திங்கள், 7 டிசம்பர் 2020 (17:22 IST)

உலர்ந்த சருமத்தை ஈரப்பதமாக்குவதில் எலுமிச்சை சாறு பேக் நன்றாக வேலை செய்கிறது. இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் செழுமை வறண்ட  சருமத்தை வளர்க்கிறது, இது இயற்கையாகவே பளபளக்கிறது. 
 
ஒரு ஃபேஸ் பேக்கிற்கு சம அளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, உலர்ந்த சரும பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் நன்றாக  கழுவவும்.
 
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சற்றை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவிட வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு தொடர்ந்து செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும். 
 
எலுமிச்சையை வைத்து ஃபேஷியல் கூட செய்யலாம். அதற்கு ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றுடன், 1/4 கப் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெய்யை சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஃபேஷியல் செய்தால், சருமம் பொலிவாவதோடு, ஈரப்பசையுடனும் இருக்கும்.
 
எலுமிச்சை சாறு மயிர்க்கால்களை வலுப்படுத்தி, முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எலுமிச்சை சாற்றின் அமிலத்தன்மை கூந்தலின் pH-ஐ சமப்படுத்த உதவுகிறது,  இதனால் பொடுகு வளர்ச்சியைத் தடுக்கிறது. 
 
எலுமிச்சை சாற்றில் உள்ள கிருமி நாசினிகள் பண்புகள் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுகின்றன. முகப்பருவில் எலுமிச்சை சாற்றை  தவறாமல் பயன்படுத்துவது வடுக்கள் மறைய உதவுகிறது.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments