செவ்வாய், 4 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 மார்ச் 2025 (09:21 IST)

சூட்கேஸில் இளம் பெண் பிணம்.. ராகுல் காந்தி பாத யாத்திரையில் கலந்து கொண்டவர்..!

ஹரியானா மாநிலத்தில் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் பிணம் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

சடலம் அடைக்கப்பட்ட சூட்கேஸை, ஒரு நபர் அங்கு வைத்து சென்றதாகவும், அதை ஒரு விழிப்புடன் இருந்த மற்றொருவர் கவனித்து, உடனே காவல்துறைக்கு தகவல் வழங்கியதாகவும் தெரிய வருகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அந்த இளம்பெண்ணின் கழுத்தில் வெட்டு காயங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுவரை கிடைத்த தகவலின்படி, அந்த பெண்ணின் பெயர் ஹிமானி நர்மல் எனவும், காங்கிரஸ் தொண்டராக செயல்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பாத யாத்திரையில் அவர் பங்கேற்றிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காவல்துறை வழக்கு பதிவு செய்து, அவரை கொலை செய்து சூட்கேஸில் வைத்தது யார் என்பதையும், சம்பவத்தின் பின்னணி என்ன என்பதையும் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.

Edited by Siva