Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாஸ் புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 24 மே 2021 (11:59 IST)
வங்கக் கடலில் உருவாகி, ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தை நோக்கி நகர்ந்து வரும் யாஸ் புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் என தகவல். 

 
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதனைத் தொடர்ந்து இன்று புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி, யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று உருவாகி வலுப்பெற்றுள்ளது.  
 
மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் 26 ஆம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
வங்கக் கடலில் உருவாகி, ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தை நோக்கி நகர்ந்து வரும் யாஸ் புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் ஆற்றல் கொண்டது என்றும் உம்ப்பன் புயல் மற்றும் டவ்தே புயல் போன்று அதிதீவிரமான ஒன்று என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

தமிழக எம்.எல்.ஏக்களிடம் எத்தனை பேரிடம் கார் இல்லை.. கட்சிவாரியான தகவல் இதோ...

20 ரூபாய் லஞ்சம் .. 30 வருடங்கள் சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கு.. ஆச்சரியமான தீர்ப்பு..

விஜய் டிவி புகழ் டிஜே பிளாக்கிற்கு திருமணம்.. மணமகள் ஒரு டாக்டரா?

POCO M8X 5G ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யும் Xiaomi!.. விலை என்ன தெரியுமா?...

அமெரிக்கா செல்ல தெலுங்கானா முதல்வருக்கு அனுமதி மறுப்பு... லண்டனில் இருந்து இந்தியா திரும்புகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments