1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (23:04 IST)

கோவிஷீல்ட் 2 வது டோஸ் எப்போது போடலாம்?

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரொனா தொற்றால் உயிரிழந்த குடும்பங்களுக்கு  ரூ.4 லட்சம்  வழங்க வேண்டுமென்ற நேரடி உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவிஷீல்ட் எத்தனை மாதத்திற்கு ஒரு முறை போடலாம் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கொரொனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட்  முதல் டோஸ் போட்ட பிறகு சுமார் 10 மாததித்ற்குப் பிறகு  2 வது டோஸ் போடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.