ராகுலை கலாய்த்த மோடி ; பதிலடி கொடுத்த சித்தராமய்யா

புதன், 2 மே 2018 (15:53 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா பதிலடி கொடுத்துள்ளார்.

 
கர்நாடகாவில் தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் மே 12 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அதன் பின்னர் மே 15 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியாக உள்ளது. எனவே, அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
 
சமீபத்தில் கர்நாடகாவில் காங்கிரஸின் கோட்டை எனக்கூறப்படும் சந்தேமரஹள்ளி என்ற இடத்தில் பேசிய பிரதமர் மோடி “கர்நாடக மாநிலத்தில் உங்கள் அரசு செய்த சாதனையை 15 நிமிடங்கள் காகிதத்தில் எழுதி வைக்காமல் பேச முடியுமா?” என சவால் விடுத்தார்.

 
இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ள சித்தராமய்யா தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். எடியூரப்பா ஆட்சியில் இருந்த போது செய்த சாதனைகளை பேப்பரை பார்த்து உங்களால் 15 நிமிடம் பேசமுடியுமா?” என சவால் விடுத்துள்ளார்.

எல்லாம் காட்டு

சீனாவில் கடும் மழை!.. வெள்ளத்தில் சிக்கி 39 பேர் மரணம்!...

கணவரை கொன்று புதைத்து காதலுடன் ஜாலி!. வசமாக சிக்கிய பெண்!...

சபாநாயகரைச் சந்திக்கும் முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள்: பின்னணி என்ன?

கரூர் சம்பவம்!. உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு அரசு வேலை கொடுப்பது சரியா?...

மதுரை அருகே மாணவர்கள் இல்லாததால் 3 அரசுப் பள்ளிகள் திடீர் மூடல்: கிராம மக்கள் பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments