மொத்தமா லாக்டவுன் போடுறதுதான் ஒரே தீர்வு! – ராகுல் காந்தி கருத்து!

செவ்வாய், 4 மே 2021 (10:53 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதே தீர்வு என ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் மாநில அளவில் வெவ்வேறு வகையில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வீரியமடைந்துள்ள நிலையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் பலர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்துவதுதான் ஒரே தீர்வு. ஊரடங்கின்போது குடும்பங்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு குறிப்பிட்ட தொகை அளிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

தவெக பெண் நிர்வாகிகள் பற்றி ஆபாச பேச்சு!.. பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு!...

அடுத்தடுத்து அதிமுக நிர்வாகிகளை நீக்கும் ஈபிஎஸ்.. மீண்டும் ஆலோசனை செய்யும் வேலுமணி, எஸ்பி சண்முகம்..!

இந்திய புவித்தட்டில் உட்புற சிதைவுகள்: இந்தியாவில் அடிக்கடி நிலநடுக்கம் வருவதற்கு வாய்ப்பா?

தவெக எம்.எல்.ஏக்கள் மட்டுமல்ல, களத்தில் குதித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்.. எல்லோரும் திருந்திட்டாங்க போல...

அடுத்த கட்டுரையில்
Show comments