Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (10:31 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கி இன்றுடன் முடிவடையும் நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.

கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் செயல்படுத்த உத்தரவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இன்றுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடியும் நிலையில் நாட்டு மக்களோடு உரையாடி வருகிறார்.

அதில் பேசிய அவர் இன்று அம்பேத்கர் பிறந்த நாளை நினவு கூர்ந்தார். பிறகு பேசிய அவர் “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும், இந்திய மக்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இந்திய மக்கள் ஊரடங்கள் பட்ட துயரங்களை என்னால் உணர முடிந்தது. இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இதை மேலும் கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த 19 நாட்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியம் வாய்ந்தது” என கூறியுள்ளார்.

21 நாட்கள் ஊரடங்கு முடிந்த நிலையில் மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் ஏப்ரல் 20 க்கு பிறகு தளர்வுகள் செய்யப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

ஒரே நாளில் 20 லட்சம் டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்து ஐஆர்சிடிசி சாதனை.. கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு..

விஜய் சேதுபதியை யாரும் தாக்கி பேச வேண்டாம்!.. சீனு ராமசாமி ஆதரவு...

ஓய்வு எடுக்க போகிறேன்.. திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை..

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தர அன்புமணி விரும்பவில்லையா? கூட்டணியில் திடீர் குழப்பம்...

இதுவரை ரூ.15,300 கோடி முதலீடு.. முதல்வர் விஜய் லண்டன் பயணம் சூப்பர் வெற்றி...

அடுத்த கட்டுரையில்
Show comments