Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பட்ஜெட் தாக்கல்: சரிவை சந்தித்துள்ள பங்குசந்தை!

Written By Prasanth Karthick
Updated: சனி, 1 பிப்ரவரி 2020 (10:53 IST)
இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பங்குசந்தை புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன.

2020 – 2021 ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பாராளுமன்ற கூட்டத் தொடரில் 2019-2020ம் ஆண்டிற்கான பொருளாதார அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் தொடங்க உள்ள நிலையில் மும்பை பங்குசந்தை புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் புள்ளிகள் 279 புள்ளிகள் குறைந்து 40,444 ஆகவும், நிப்டி 81.42 புள்ளிகள் சரிந்து 11,880.65 புள்ளிகளாகவும் உள்ளது.

பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பங்குசந்தை புள்ளிகளின் ஏற்ற இறக்கங்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

பிரேமலதாவும், சுதீஷும் நல்ல பெர்ஃபார்ம் பண்றாங்க!.. ChatGPT சொல்லுது!.. சிரிக்க வைக்கும் தேமுதிக!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

காவிரி நீரை பெற தமிழகத்துக்கு சட்டப்படி உரிமை உண்டு!.. ஆனால்!.. டி.கே.சிவக்குமார் பேச்சு!..

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு!.. தமிழர்கள் உட்பட 400 பேர் மாயம்!...

உதயநீதி மீண்டும் கைது செய்யப்படுவாரா?!... மகளிர் ஆணையம் அதிரடி நடவடிக்கை....

அடுத்த கட்டுரையில்
Show comments