ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 ஜூலை 2021 (10:22 IST)

மாணவர் கடன்களுக்காக கிரெடிட் கார்டு… அறிமுகப்படுத்திய மம்தா!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாணவர்கள் கல்விக்காக கடன் பெற கிரெடிட் கார்ட் திட்டத்தை அறிவித்துள்ளார்.

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் கிரெடிட் கார்ட் திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். .இந்தக் கடனை இந்தியா அல்லது வெளிநாடுகளில் படிக்கும் இளங்கலை, முதுகலை, பி.ஹெச்டி ஆராய்ச்சி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். இந்தத் தொகைக்கு மிகவும் குறைந்த ஆண்டு வட்டியே வசூலிக்கப்படும். பணத்தை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 15 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.