புதுச்சேரி முன்னேற்ற தூதராக வாருங்கள் : ரஜினிக்கு அழைப்பு விடுத்த கிரண்பேடி
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக பதவியேற்ற பின் கிரண் பேடி பல அதிரடி நடவடிக்கைகளை தொடங்கினார்.
அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார், தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை அலுவலகத்தில் இருந்து மக்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அடுத்து புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதேபோல், வி.ஐ.பிக்கள் வாகனங்களில் சைரன் ஒலி பயன்படுத்த தடை விதித்தார்.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் முன்னேற்றத் தூதராக நடிகர் ரஜினிகாந்த் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.