தெலங்கானாவில் தொடங்குகிறது சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழகத்தில் எப்போது?

Siva
செவ்வாய், 5 நவம்பர் 2024 (16:45 IST)
தெலுங்கானா மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நாளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 நாடு முழுவதும் தெலுங்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஒரு சில மாநிலங்களில் ஏற்கனவே ஜாதி வாரி கணக்கெடுப்பு பணி முடிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நாளை சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கும் என்றும், நவம்பர் 30ஆம் தேதிக்குள் கணக்கெடுப்பு பணி முடித்து, அறிக்கைகள் பொது தளத்தில் வெளியிடப்படும் என்றும் தெலுங்கானா மாநில அரசு தெரிவித்துள்ளது.

தெலுங்கானாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆட்சிக்கு வந்தவுடன் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தற்போது ஜாதி வாரி கணக்கெடுப்பை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு ஜாதி வாரி கணக்கெடுப்பு தெலுங்கானாவில் நடத்தப்பட்ட நிலையில், அதற்கான முடிவுகளை அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் நிலையில், தமிழகத்தில் எப்போது கணக்கெடுப்பு நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


Edited by Siva
 

எல்லாம் காட்டு

ஆதரவு மட்டும் வேணும்!. ஆனா தீர்ந்து போன கட்சியா?!.. விஜய் பேசியது சரியா?...

உலகமே உங்கள சுத்திதான் இயக்குற மாதிரி நினைப்பா?!. விஜய்க்கு பழனிச்சாமி பதிலடி...

நாங்கலாம் கோட் சூட் போடக்கூடாதா?.. இதான் காரணம்!.. திருச்சியில் விஜய் அனல் பேச்சு!....

கதறுங்க!. கல்யாண வீட்லலாம் போய் ஏன் பொலம்புறீங்க?!.. திமுகவை நக்கலடித்த முதல்வர் விஜய்..

இந்த விஜய் கேள்வி கேட்பான்!.. சும்மா இருக்கமாட்டான்!.. திருச்சியில் முதல்வர் பேச்சு!..

அடுத்த கட்டுரையில்
Show comments