ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (11:04 IST)

மனைவியின் செல்லப்பெயரை நாய்க்கு வைத்ததால் விபரீதம்! – பெண் மீது கொலை முயற்சி!

குஜராத்தில் மனைவியின் செல்லப்பெயரை நாய்க்கு வைத்த பெண்ணை நபர் ஒருவர் நெருப்பு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த நீடாபென் என்ற பெண் தான் வளர்த்து வந்த நாய்க்குட்டிக்கு “சோனு” என பெயரிட்டுள்ளார். அவரது வீட்டிற்கு அருகில் வசித்து வரும் பர்வத் என்பவர் தனது மனைவியை செல்லமாக “சோனு” என அழைத்து வந்துள்ளார்.

ஏற்கனவே இருவீட்டாருக்கும் குடிநீர் பங்கீட்டில் சண்டை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சோனு என தனது மனைவியின் செல்லப்பெயரை வேண்டுமென்றே நாய்க்குட்டிக்கு வைத்துள்ளதாக நீடாபென்னிடம் பர்வத் ஆட்களுடன் சென்று சண்டையிட்டுள்ளார். இதில் கூட சென்ற நபர் ஒருவர் நீடாபென் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியுள்ளார். இதனால் தீக்காயங்களுடன் நீடாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.