நேரடி இலவச தரிசனம் ரத்து: திருப்பதியில் பக்தர்கள் திடீர் போராட்டம்!

வெள்ளி, 22 டிசம்பர் 2023 (17:02 IST)
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச தரிசன டோக்கன், 300 ரூபாய் டோக்கன், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள் உடன் வரும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி கிடைக்கும் என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே காத்திருப்பு மண்டபங்களில் இருக்கும் 32 அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி வழிவதால் புதிதாக நேரடி இலவச தரிசன செய்ய பக்தர்களை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்

இதனை அடுத்து பக்தர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு புரிய வைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. திருப்பதியில் திடீரென பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

எல்லாம் காட்டு

பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் அழுகிய முட்டை.. தவெக அரசு கண்காணிக்க வேண்டும்: அண்ணாமலை

திமுகவுக்கு எதிராக போரட்டங்கள் வேண்டாம்!. திருமாவளவன் கோரிக்கை....

விஜய் ஆட்சி தொடங்கி ஒரு மாதம் கூட ஆகவில்லை.. அதற்குள் 4,950 கோடி ரூபாய் முதலீடு.. ஜேகே டயர் நிறுவனம் அறிவிப்பு..!

இனிமேல் அனுமதி வாங்க தலைமைக்கு போக வேண்டாம்.. உதவி செயற்பொறியாளர்கள் முதல் கண்காணிப்பு பொறியாளர்கள் வரை அதிகாரம் பகிர்வு..

இவர் நாசா விஞ்ஞானியா இருப்பார் போல!.. ட்ரோலில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ!..

அடுத்த கட்டுரையில்
Show comments