Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதி தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழந்தது அசானி - வானிலை ஆய்வு மையம் தகவல்!

Written By Prasanth Karthick
Updated: புதன், 11 மே 2022 (08:48 IST)

வங்கக்கடலில் அதி தீவிர புயலாக உருவான அசானி தற்போது புயலாக வலுவிழந்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்தியா முழுவதும் கோடை காலம் நிலவி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிலிருந்து புயலாக உருவான இதற்கு அசாணி என பெயர் வைக்கப்பட்டது.


கடந்த 8ஆம் தேதி புயலாக உருவான அசானி பின்னர் வலுவடைந்து அதி தீவிர புயலாக ஆனது. இந்தப் புயல் தற்போது ஆந்திரா நோக்கி நகர்ந்து வரும் நிலையில் வலுவிழந்து அதிதீவிர புயலில் இருந்து புயலாக மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்தப் புயல் ஆந்திராவில் காக்கிநாடா - விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் நிலையில் ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும், ஒடிசா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். பிற மாநிலங்களிலும் மேற்கு வங்காளத்திலும் தென் பகுதியிலும் கனமழை கொட்டித் தீர்க்கும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

விஜய் வருங்கால பிரதமரா?!.. டி.கே.சிவக்குமார் கொடுத்த ரியாக்‌ஷன்...

40 டிரில்லியன் டாலரை தாண்டிய அமெரிக்க கடன்!.. எல்லாம் டிரம்ப் செஞ்ச வேலை!..

இனிமே ரேஷன் கார்டே தேவையில்ல!.. மொபைலை காட்டியே பொருள் வாங்கலாம்!..

8 மணி நேரத்தில் 4 ஆயிரம் கலெக்‌ஷன்!.. பிச்சையெடுத்து சம்பாதித்த யுடியூபர்!....

டாஸ்மாக் போல் ரேசன் கடைகளிலும் ஆன்லைன் முறை.. செளமியா அன்புமணி கோரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments