ஆந்திராவில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு! – மொத்த பாதிப்பு 35 ஆக உயர்வு!

ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (12:46 IST)
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு மெல்ல உயரத் தொடங்கியுள்ள நிலையில் ஆந்திராவில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் ஒமிக்ரான் சோதனை மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து மகராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு வந்த பலருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் முதன்முறையாக வெளிநாட்டிலிருந்து ஆந்திரா வந்த நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட அந்த நபர் அயர்லாந்தில் இருந்து மும்பை வழியாக விசாகப்பட்டிணம் வந்துள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

எல்லாம் காட்டு

6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

திமுக எல்லாத்தையும் உடனே கொடுத்துட்டாங்களா?!.. விஜய்க்கு கம்யூனிஸ்ட் ஆதரவு...

எல்லாமே தெரிஞ்சவங்க ஒன்னுமே பண்ணலையே.. புதுசா வந்தவங்க கவனமாக இருப்பாங்க.. விஜய் அரசு குறித்து சமுத்திரக்கனி!

2 நாட்கள் டெல்லியில்!.. யாரையெல்லாம் சந்திக்கிறார் விஜய்?!... பரபர அப்டேட்...

அடுத்த கட்டுரையில்
Show comments