கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் : அமித்ஷா உறுதி

புதன், 7 மார்ச் 2018 (12:25 IST)
பாஜகவினர் சிலைகளை சேதப்படுத்தினால் கட்சிரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் நேற்று முன்தினம் லெனின் சிலை பாஜகவினரால் அகற்றப்பட்டது. இது குறித்து எச்.ராஜா நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், நாளை சாதி வெறியர்  ஈவேரா சிலை அகற்றப்படும்  என தெரிவித்திருந்தார். இதனால் பெரியார் சிலை ஒருசில இடங்களில் மர்ம நபர்கள் சேதபடுத்தியுள்ளதால் தமிழகம் முழுவதும் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சிலைகள் சேதப்படுத்தப்படும் சம்பவங்கள் குறித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார், அதில் ”தமிழகம் மற்றும் திரிபுராவிலுள்ள பாஜக கட்சி தலைவர்களிடம் பேசியுள்ளேன். சிலைகள் சேதப்படுத்தும் சம்பவத்தில் பாஜகவினர் ஈடுபட்டால். அவர்கள் மீது கட்சிரீதியான நடவடிக்கை எடுக்கபடும்” என தெரிவித்துள்ளார். 
 
இதனையடுத்து திருப்பத்தூரில் பெரியார் சிலையை சேதப்படுத்திய முத்துராமன் என்பவரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார். 

எல்லாம் காட்டு

உதவி கேட்ட நடிகர் முத்துக்காளை!. உடனே நடவடிக்கை எடுத்த விஜய்!..

முதல்வர் விஜய்க்கு 17 துறை ஒதுக்கீடு!.... வெளியான அமைச்சரவை பட்டியல்!..

விஜயை நேரில் சந்தித்து 6 கோரிக்கைகள் வைத்த கமல்!.. முக்கிய அப்டேட்...

சிறுமியின் பேச்சைக்கேட்ட முதல்வர் விஜய்!.. உடனே மாத்திட்டாரு!...

மூனெழுத்து இட்லி நடிகைதான் எல்லாத்துக்கும் காரணம்!.. ரவி மோகன் கண்ணீர்..

அடுத்த கட்டுரையில்
Show comments