தொடர்ந்து 2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva
வெள்ளி, 18 ஜூலை 2025 (10:00 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், நேற்று பங்குச்சந்தை சரிவில் முடிந்தது. இந்த நிலையில், இன்றும் பங்குச்சந்தை சரிவில் தான் வர்த்தகம் தொடங்கி இருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிந்து 82,000 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 70 புள்ளிகள் சரிந்து 25,042 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, எல் அண்ட் டி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதே நேரத்தில், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டிஸ் லேப், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐ.டி.சி, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

ரூ.10 லட்சம் கடன்!.. கணவன் காதில் விஷயத்தை ஊற்றிய மனைவி!...

கட்சியில் சேர்ப்பதற்காக போட்ட கையெழுத்தைவிட நீக்குவதற்கு போட்ட கையெழுத்து அதிகம்: ஈபிஎஸ் குறித்து வேலுமணி ஆதரவாளர்கள்..

எதனால் தோல்வி?.. நிர்வாகிகள் மீது நடவடிக்கை!.. சாட்டையை சுழற்றும் முக ஸ்டாலின்!..

உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல், பாராளுமன்ற தேர்தல் எல்லாம் அடுத்தடுத்து வரும்: ஸ்டாலின் பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் கிண்டல்..

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 2 நாள் கூட்டம்.. முதல்வருக்கு வழங்கப்பட்ட 3 முக்கிய பரிந்துரைகள்...

அடுத்த கட்டுரையில்
Show comments