Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரம் முழுவதும் நெகட்டிவ்.. இன்றும் பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அச்சம்..!

Written By Siva
Updated: வெள்ளி, 20 டிசம்பர் 2024 (09:32 IST)
இந்த வாரத்தில் நான்கு நாட்களுமே பங்குச்சந்தை சரிவில் இருந்த நிலையில், இன்று ஐந்தாவது நாளாகவும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது. எனவே, இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை சரிந்து பெரும் நஷ்டத்தை உண்டாக்கிய நிலையில், முதலீட்டாளர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக இந்திய பங்குச்சந்தை சரிந்து வரும் நிலையில், இன்றும் மும்பை பங்குச்சந்தை 150 புள்ளிகள் சரிந்து 79,061 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை 27 புள்ளிகள் சரிந்து 23,926 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், இன்போசிஸ், கோடக் மகேந்திரா வங்கி, டாட்டா மோட்டார்ஸ், டிசிஎஸ், மற்றும் டைட்டான் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில், டாட்டா ஸ்டீல், சன் பார்மா, ஸ்டேட் வங்கி, இண்டஸ் இன்ட் வங்கி, இந்துஸ்தான் லீவர், எச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பெடரல் வங்கியின் வட்டி விகிதம் மாற்றம் காரணமாகவே உலகம் முழுவதும் பங்குச்சந்தை சரிந்து வருவதாக கூறப்படுகிறது.


Edited by Siva

எல்லாம் காட்டு

கறிக்கோழி விற்பனை கடையடைப்பு போராட்டம் வாபஸ்!..

யாரா இருந்தாலும் விட்ராதீங்க!.. ஆக்சன் எடுங்க!.. விஜய் போட்ட ஆர்டர்!...

டெல்லி போராட்டம்!.. மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!. பணிந்த ஒன்றிய அரசு!...

இனிமேல் உனக்கு துணை நிற்பேன்!.. மகனை தூக்கி கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ்!..

வருமான வரி தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. முக்கியமாக கவனிக்க வேண்டியது எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments