மீண்டும் உயர்ந்தது பங்குச்சந்தை.. வாரத்தின் கடைசி நாளில் சென்செக்ஸ் நிலவரம்..!

வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (11:01 IST)
பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக திடீரென சரிந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்று முன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகள் அதிகரித்து 65 ஆயிரத்து 38 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
 அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 80 புள்ளிகள் அதிகரித்து 19,333 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
வாரத்தின் கடைசி நாளில் பங்கு சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
மேலும் இன்று பெல், டாட்டா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள்  உயர்ந்துள்ளதாகவும் எச்.டி.எப்.சி வங்கியின் பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

சனாதானம் கண்டிப்பாக தேவை!.. நடிகர் அர்ஜூன் பேட்டி!...

தவெகவில் இணையும் சி.வி. சண்முகம்?!.. அதிர்ச்சியில் அதிமுக!..

கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள்!.. தனியார் பார்களில் குவியும் மதுப்பிரியர்கள்!..

டெல்லியில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைக்காமல் சென்னை திரும்பிய விஜய்!..

விஜய் பற்றிய செய்தி!.. 46ம் இடத்திற்கு தள்ளப்பட்ட புதிய தலைமுறை!.. பின்னணியில் யார்?..

அடுத்த கட்டுரையில்
Show comments