வெறுப்புக்கு எதிராக வாக்களித்துவிட்டேன்..! வாக்களித்த பின் நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி.!!

Written By Senthil Velan
Updated: வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (13:34 IST)
வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன் என்றும் நீங்களும் வாக்களிக்க வேண்டும் என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
 
நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில்  முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் பெங்களூரு மத்திய தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் நடிகர் பிரகாஷ்ராஜ் வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். நீங்களும் வாக்களிக்க வேண்டும் என்றும் வாக்களிப்பது மிகவும் முக்கியமான விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: மக்களவைத் தேர்தல்.! மணக்கோலத்தில் வாக்களித்த இளைஞர்..!!
 
இந்த தேர்தலில் நாம் தேர்ந்தெடுக்கப் போகிறவர்கள் தான் நம்முடைய எதிர்காலத்தை முடிவு செய்பவர்கள் என்று அவர் கூறியுள்ளார். உங்கள் தலைவரை, உங்கள் பிரதிநிதியை நீங்கள் தேர்ந்தெடுங்கள் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

டெல்லியில் போராடும் மாணவர்கள்!. ரூ.67,734க்கு பீட்சா அனுப்பிய இளைஞர்!.. நெகிழ்ச்சி செய்தி!..

வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை!.. ஜிபி முத்து மீது தாக்குதல்!...

நாளை வரை அவகாசம் கேட்ட பாஜக!.. தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படுமா?...

லண்டன் ஓட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்.. 8 மாதம் கழித்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..

சினிமா பாத்து சீன் போடுறது இல்ல ஆட்சி!.. தவெகவை விளாசிய பிரேமலதா!..

அடுத்த கட்டுரையில்
Show comments