திமுகவுடன் பேச்சுவார்த்தை.! 4 தொகுதிகளை கேட்டுள்ளோம்.. திருமாவளவன்..!!

Senthil Velan
திங்கள், 12 பிப்ரவரி 2024 (17:08 IST)
மக்களவை தேர்தலில் மூன்று தனித் தொகுதிகளும், ஒரு பொது தொகுதி என நான்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
 
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் திமுக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் டி ஆர் பாலு தலைமையிலான திமுக தேர்தல் குழுவினருடன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
 
பேச்சு வார்த்தைக்கு பிறகு செய்தியாளிடம் பேசிய அவர்,  தாங்கள் போட்டியிட விரும்பிய தொகுதிகளுக்கான பட்டியலை திமுக தேர்தல் குழுவிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
 
தனித் தொகுதிகள் மூன்று, பொது தொகுதி ஒன்று என மொத்தம் நான்கு தொகுதிகளை விடுதலை சிறுத்தைகள்b கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

ALSO READ: சைதை துரைசாமி மகனின் உடல் மீட்பு.. 8 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சோகம்.!!
 
மக்களவைத் தேர்தலில் இந்த கூட்டணி பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக திருமாவளவன் தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

நீட் போராட்டம்!.. ராகுல் கைது!. ஜனநாயகன் வசூலுக்காகவே மௌனம் காக்கிறாரா விஜய்?...

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்.. விவாதம் நடத்த தயார்... அமைச்சர் கிரண் ரிஜிஜு

பாமக தலைவராக தன்னை அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு.. வாபஸ் பெற்றார் டாக்டர் ராமதாஸ்..

இடைத்தேர்தலில் களமிறங்குகிறாரா கனிமொழி? விஜய்யின் பெண் வாக்காளர்களை இழுக்க முயற்சியா?

எங்கள் டைமை வேஸ்ட் செய்யாதீர்கள்.. டெல்லி மாணவர்கள் மீதான தடியடி வழக்கில் நீதிமன்றம் கண்டிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments