அச்சச்சோ... அது சும்மா... வெறும் உல்லுலாய்... சமாளித்த எச்.ராஜா!!!

வியாழன், 21 மார்ச் 2019 (11:35 IST)
பாஜக வேட்பாளர்கள் பட்டியலை தன்னிச்சையாக வெளியிட்ட ஹெச்.ராஜா அது வெறும் உத்தேச பட்டியல் என கூறி சமாளித்திருக்கிறார்.
 
அதிமுக கூட்டணியில் தூத்துகுடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோவை மற்றும் சிவகங்கை என ஐந்து தொகுதிகளை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை.
 
ஆனால் அதற்குள் நேற்று பாஜக தேசிய செயலாளர் ஹெ.ராஜா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சிபி. ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்தரன் ஆகியோர் போட்டியிடுகிறார் என்று கூறினார்.
 
முறையாக கட்சி தலைமை அறிவிப்பதற்குள்ளேயே ஹெச்.ராஜா இப்படி கூறியது பாஜக தலைமையை கடும் கோபத்திற்கு ஆளாக்கியது. பாஜகவை சேர்ந்த சிலரே ராஜா மீது விமர்சனங்களை முன் வைத்தனர்.
 
இந்நிலையில் ஹெச்.ராஜா நேற்று நான் வெளியிட்டது வெறும் யூகங்களின் அடிப்படையிலான பட்டியலே. வேட்பாளர்கள் பட்டியலை முறைப்படி கட்சி மேலிடம் அறிவிக்கும் என கூறினார்.

எல்லாம் காட்டு

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை நடத்திய தீவிரவாதி சுட்டுக்கொலை.. பாகிஸ்தானில் இன்னொரு மர்ம மரணம்..!

அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை ஆசிரமம் தான்: பிரசாந்த் கிஷோர் அதிரடி முடிவு...!

மொபைல் கடை வைத்திருந்தவர் இன்று போக்குவரத்து அமைச்சர்.. இதுதான் தவெக...

தவெக அமைச்சரவையில் 4 பெண்கள்!.. யாருக்கு என்ன துறை?!. வாங்க பார்ப்போம்!..

அமைச்சருக்காக திருப்பரங்குன்றம் கோவிலில் விதிமீறலா?!. அறிக்கை கேட்கும் நீதிமன்றம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments