ஒரே போட்டியில் மட்டுமே வாய்ப்பு – ஜெகதீசனை தூக்கியது ஏன்?

வியாழன், 15 அக்டோபர் 2020 (09:58 IST)
சென்னை அணியைச் சேர்ந்த நாராயண் ஜெகதீசனை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பளித்து அணியில் இருந்து தூக்கியுள்ளார் தோனி.

ஐபிஎல் தொடரில் அறிமுகப் போட்டியாக பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் இறக்கப்பட்டார் ஜெகதீசன் நாராயண். அந்த போட்டியில் அவர் 28 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு அறிமுக வீரராக அவர் தனது பங்களிப்பைக் கொடுத்திருந்தார். ஆனால் அதற்கடுத்த போட்டியிலேயே அவர் தூக்கப்பட்டு அவருக்கு பதில் சாவ்லா 6 ஆவது பவுலராக சேர்க்கப்பட்டார். அந்த போட்டியிலும் கூட அவர் ஒரு ஓவர்தான் பந்து வீசினார்.

இந்நிலையில் ஜெகதீசன் நீக்கப்பட்டது ஏன் என தோனி விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘ஒரு இந்திய பேட்ஸ்மென் சிறப்பாக விளையாடாத நிலையில் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளர்தான் தேவைப்பட்டது.

ஜெகதீசனை 7,8-ம் நிலையில் களமிறக்குவது சரியாக இருக்காது' எனப் பதிலளித்தார். அதனால் அடுத்தடுத்த போட்டிகளிலாவது அவருக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எல்லாம் காட்டு

சிஎஸ்கே அணியில் இருந்து திடீரென விலகிய ஸ்டீபன் பிளமிங்.. என்ன காரணம்?

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய ஸ்பெயின்..

35 வருடங்களுக்கு பின் சீக்கிரம் வெளியேறிய பிரேசில் அணி.. விரக்தியில் ஓய்வு பெற்ற நெய்மார்...

அடுத்த கட்டுரையில்
Show comments