Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏலத்துக்கு முன்னர் தோனியை சிஎஸ்கே விடுவிக்க வேண்டும் – ஆகாஷ் சோப்ரா சொல்லும் யோசனை!

Updated: செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:28 IST)
சிஎஸ்கே அணி அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஏலத்துக்கு முன்னர் தோனியை விடுவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ப்ளே ஆஃப் தகுதியை இழந்த முதல் அணியாக சிஎஸ்கே மாறியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தோல்விக்கு கேப்டன் தோனியின் போதாமையே காரணம் என சமூக வலைதளங்களில் பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு அணி கேப்டன் மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாதது இதுவே முதல்முறை. இந்நிலையில் அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணிக்குக் கேப்டனாக இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ‘சிஎஸ்கே அணி அடுத்த் ஆண்டு நடக்கும் ஏலத்துக்கு முன்னர் தோனியை விடுவிக்க வேண்டும். ஏனன்றால் தோனியை தக்கவைத்தால் அவரை 3 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது. தோனியோடு நீங்கள் 3 ஆண்டுகள் இணைந்து செயலாற்ற முடியுமா என யோசிக்க வேண்டும். அவரை ஏலத்தில் ரைட் டு மேட்ச் கார்டில் தேர்வு செய்து கொள்ளலாம்.’ எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

இந்திய டெஸ்ட் அணியில் ஜம்மு காஷ்மீரின் முதல் கிரிக்கெட் வீரர்.. குவியும் வாழ்த்துக்கள்..

இன்று முதல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்.. முதல் போட்டி யார் யாருக்கு?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. திடீரென விலகிய பும்ரா.. என்ன காரணம்?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்.. இந்திய அணி அறிவிப்பு.. மீண்டும் வருகிறார் ஜடேஜா...

வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை.. 16 வயதிற்குள் இதுவரை யாருமே செய்யாத சாதனை...!

அடுத்த கட்டுரையில்
Show comments