திருச்செந்தூர் சென்றால் இந்த தோஷம் பறந்துவிடுமாம்?

திங்கள், 5 டிசம்பர் 2022 (20:26 IST)
ஒவ்வொரு தோஷத்திற்கும் ஒவ்வொரு பரிகார கோவில் இருக்கும் என்பதும் அந்த பரிகார கோவிலுக்கு சென்று வணங்கினால் தோஷம் தீர்ந்து விடும் என்றும் கூறப்படுவதுண்டு
 
அதுபோல் குரு தோஷம் உள்ளவர்கள் திருச்செந்தூர் சென்று வணங்கினால் அனைத்து தோஷமும் பறந்து விடும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் அசுரர்களை அழிக்க முருகன் அவதாரம் எடுத்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள குரு என்ற தட்சிணாமூர்த்தி விசேஷமானவர் என்பதால் இந்த கோயிலுக்கு சென்று குருவை தரிசனம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கிவிடும் 
 
குறிப்பாக குருவுக்கான தோஷ பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் இந்த கோயிலுக்கு ஒரு முறை அவசியம் செல்ல வேண்டும் என்றும் ஆன்மீகவாதிகள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே குரு தோஷம் உள்ளவர்கள் கண்டிப்பாக திருச்செந்தூர் சென்று அதிக பலன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது
 
Edited by Mahendran

அடுத்த கட்டுரையில்
Show comments