Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமண தடையா? குருவுக்கு சர்க்கரை பொங்கல் படைத்தால் போதும்!

Written By Mahendran
Updated: வெள்ளி, 13 ஜனவரி 2023 (21:17 IST)
திருமண வயதை எட்டிய ஆண் மற்றும் பெண்ணுக்கு திருமண தடை இருந்தால் உடனே குருவுக்கு பொங்கல் வைத்து படைத்தால் உடனடியாக திருமணம் நடக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஒருவருக்கு ஜாதகத்தில் குருபலம் இருந்தால் மட்டுமே திருமணம் நடக்கும் என்றும் குருபலம் இல்லை என்றால் திருமணம் தள்ளி போகும் என்றும் ஜோதிடர்கள் கூறுவது உண்டு. 
 
அந்த வகையில் திருமணம் தடை ஏற்பட்டு வந்தால் உடனடியாக திருமணம் நடப்பதற்கு குருவுக்கு சர்க்கரை பொங்கல் படைக்க வேண்டும் என கூறப்படுகிறது
 
குருவுக்கு இனிப்பு சுவை பிடிக்கும் என்பதால் சர்க்கரை பொங்கல் படைத்தால் உடனடியாக திருமணம் நடைபெற குரு அருள் செய்வார் என்று கூறப்படுகிறது. 
 
அதேபோல் திருமணம் ஆனவர்கள் புத்திர பாக்கியம் இல்லாதவர்களும் குருவை வழிபடலாம் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

அடுத்த கட்டுரையில்