1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (13:33 IST)

துர்க்கை அம்மனை வழிபட ஏற்றதா அஷ்டமி தினம்...?

Goddess Maheshwari
அஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்களைக் கொண்டு அர்ச்சனை செய்யலாம். மேலும் சிவப்பு வஸ்திரத்தை அம்பாளுக்கு சாத்தியும் வழிபடலாம்.


துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சண்டிகை தேவியின் சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும். நல்லெண்ணெய் வழிபாடும், இந்த சகஸ்ர நாமமும் சக்தி வாய்ந்தவை.

துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் ‘துர்கா சப்தசதி’ என்ற 700 ஸ்லோகங்கள் படிப்பது நல்ல மனநிலையை ஏற்படுத்தும். பிறவி என்று வந்து விட்டால் கஷ்டங்கள், துன்பங்கள் வரத்தான் செய்யும். துக்கங்கள் அதிகமாகும். அந்த துக்கத்தைப் போக்குபவளே துர்க்காதேவி.

வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறவும், சிறை வாசத்திலிருந்து விடுபடவும் துர்க்காதேவியை சரண் புகுந்தால், வெற்றியும் நிவாரணமும் சித்திக்கும்.

மிகச் சிறிய விஷயத்திலிருந்து, பெரிய பதவி அடைய முயற்சிக்கும் விஷயம் வரை, நினைத்தது நடக்க வேண்டுமானால், துர்க்கையின் திருவடி நிழலைப் பிரார்த்திப்பதே சிறந்த வழி.

பரசுராமருக்கு அமரத்வம் அளித்தவள் துர்க்காதேவி. அவளது உபாசனை மனத் தெளிவைத் தரும். துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை. மனத் தளர்ச்சியோ, சோகமோ உண்டாவதில்லை.

ஸ்ரீ துர்க்கையின் வாகனம் சிம்மம். இவளுடைய கொடி "மயில்தோகை''. இந்தத் துர்க்காவை பூஜை செய்த ஒருவன், சொர்க்க சுகத்தை அனுபவித்து பின் நிச்சயமாக மோட்சத்தையும் அடைவான்.