விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டு; ரிசர்வ் வங்கி

செவ்வாய், 3 அக்டோபர் 2017 (15:04 IST)
புதிய 100 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகவும் பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 

 
இந்த நிதியாண்டின் இறுதியில் மார்ச் மாதம் 200 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணி நிறைவு பெறும். அதனைத்தொடர்ந்து புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்கும். படிப்படியாக திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அண்மையில் வெளியான புதிய ரூபாய் நோட்டுக்கள் வடிவத்தில் மாற்றம் பெற்றதால் ஏடிஎம் வழியாக மக்களுக்கு கிடைக்கவில்லை மாறாக வங்கிகள் மூலமாகவே மக்களை சென்று சேர்ந்தது. அதுபோல புதிதாய் அச்சடிக்கப்பட உள்ள 100 ரூபாய் நோட்டுக்கள் வடிவத்தில் எந்த மாற்றமும் இருக்காது எனவே எளிதாக ஏடிஎம் வழியாக பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

இனிமேல் அனுமதி வாங்க தலைமைக்கு போக வேண்டாம்.. உதவி செயற்பொறியாளர்கள் முதல் கண்காணிப்பு பொறியாளர்கள் வரை அதிகாரம் பகிர்வு..

இவர் நாசா விஞ்ஞானியா இருப்பார் போல!.. ட்ரோலில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ!..

போலீஸ் சிரிக்கவே கூடாதா?!.. வன்னியரசு!..

ஆதவ் அர்ஜுனா மீது அதிருப்தியில் முதல்வர் விஜய்?!.. நடப்பது என்ன?...

எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.. பணிக்கு திரும்புங்கள்.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்...

அடுத்த கட்டுரையில்
Show comments