10 கோடி ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் ஜியோ: கலக்கத்தில் செல்போன் நிறுவனங்கள்

வியாழன், 27 டிசம்பர் 2018 (13:29 IST)
இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணி நெட்வொர்க் நிறுவனமாக திகழும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ அடுத்து டச் ஸ்க்ரீன் கொண்ட 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 
 
ஏற்கனவே ஜியோ ரூ.1500க்கு பட்ஜெட் போன் ஒன்றை அறிமுகம் செய்திருந்தது. அந்த போனில் டச் ஸ்க்ரீன் இல்லாத்தும் பெரிய ஸ்க்ரீன் இல்லாததும் பெரும் குறையாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இதையும் சரி செய்ய இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்க உள்ளது ஜியோ. 
 
நவீன வசதிகள் கொண்ட 4ஜி ஸ்மார்ட்போனை தயாரிக்க அமெரிக்காவின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான பிளெக்ஸூடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது ஜியோ.  
 
முதல்கட்டமாக 10 கோடி போன்களை தயாரிக்க இருப்பதாகவும் விரைவில் பணிகள் தொடங்கும் எனவும் ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகளவு மொபைல் போன்களை உற்பத்தி செய்வதால், அரசாங்கத்திடம் வரி சலுகையை கோர ஃபிளெக்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லாம் காட்டு

அரசியலுக்கு வா!.. அழுத்தம் கொடுக்கும் கஸ்தூரி ராஜா!. விஜய் ரூட்டில் தனுஷ்...

அண்ணாமலை Vs விஜய்!. மாறப்போகும் அரசியல் களம்!.. பதட்டத்தில் திமுக!...

மீண்டும் அட்டாக்!. ஈரானில் ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார்!.. டிரம்ப் எச்சரிக்கை..

தமிழகம் முழுவதும் ரெஸ்டோபாருக்கு அனுமதி!.. மதுபான பிரியர்கள் மகிழ்ச்சி!..

120-க்கும் மேற்பட்ட முக்கிய விஞ்ஞானிகள் ராஜினாமா.. என்ன நடக்கின்றது இஸ்ரோவில்?

அடுத்த கட்டுரையில்
Show comments