தினமும் 3ஜிபி டேட்டா, மளிவு விலையில்: களமிறங்கிய பிஎஸ்என்எல்!

சனி, 7 ஏப்ரல் 2018 (18:20 IST)
ஐபிஎல் போட்டி இன்று முதல் துவங்கும் நிலையி, ஜியோ மற்றும் ஏர்டெல் ஏற்கனவே சலுகைகளை வழங்கியது. தற்போது பிஎஸ்என்எல் தனது பங்கிற்கு சலுகைகளை அறிவித்துள்ளது.  
ரூ.258 என்ற விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் 51 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 153 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கபப்டுகிறது. இந்த சலுகை ஐபிஎல் கிரிகெட் தொடரை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு முன்னர் ஜியோ 102 ஜிபி டேட்டா வழங்கும் சலுகையை ரூ.251 விலையில் அறிவித்தது. ஏர்டெல் நிறுவனம் ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை மைஏர்டெல் டிவி செயலியில் பயனர்களுக்கு இலவசமாக நேரலையில் வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 
 
பிஎஸ்என்எலின் இந்த சலுகை இன்று முதல் (ஏப்ரல் 7) ஏப்ரல் 30, 2018 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

பாட்டிலை உள்ள போட்டா காசு வரும்!. பாட்டிலுக்கு 10 ரூபா சிக்கலுக்கு தீர்வு!..

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம் எதிரொலி... இந்திய பங்குச் சந்தையில் மாபெரும் எழுச்சி!

6 முதல் 8-ஆம் வகுப்பு வரை முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: செப்டம்பர் 17-ல் தொடக்கம்!

மெட்ரோ வசம் செல்லும் பறக்கும் ரயில்: ரூ.4,500 கோடியில் சென்னை கடற்கரை - பரங்கிமலை வழித்தடம் அதிரடி மாற்றம்!

4 கோடி காரில் சென்று பாத்திரம் கழுவும் வேலை செய்யும் சீன பெண்!. இணையத்தில் வைரல்..

அடுத்த கட்டுரையில்
Show comments