90 ஜிபி டேட்டா; ரூ.429-க்கு: ஜியோ, ஏர்டெல்லுக்கு ஆப்படிக்கும் பிஎஸ்என்எல்!!

புதன், 6 செப்டம்பர் 2017 (11:52 IST)
பிஎஸ்என்எல் ரூ.429-க்கு தனது புதிய திட்டத்தை ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.


 
 
ஜியோ தனது இலவச சேவைகள் முடிந்ததும் வாடிக்கையாளர்களுக்கு கட்டண சேவையை துவங்கியது. ஆனால் அதில் பல சலுகைகளை வழங்கியது. 
 
ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல்லும் சரிசமமான சலுகை சேவைகளை அறிமுகம் செய்தது. தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
 
பிஎஸ்என்எல் ரூ.429 திட்டமானது 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும். நாள் ஒன்றுக்கு 1 ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கப்படும். மொத்தம் 90 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
 
தற்போதைய தொலைத்தொடர்பு சந்தை சூழ்நிலையில் இது மிகவும் போட்டி மிகுந்த திட்டமாக திகழும் என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

சரக்கு பாட்டில் வாங்குவதில் புதிய நடைமுறை!.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி முடிவு..

ஒரு எம்.எல்.ஏவை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையில்லை.. ஜேடி பிரபாகர்...

காங்கிரஸ் - திமுக ஒருவரை ஒருவர் எதிரி போல் பார்க்கின்றதா? ஆனால் கனிமொழியையும் ஜோதிமணியையும் பார்த்தா அப்படி தெரியலையே

மாதம் ரூ.2500 மட்டுமல்ல.. இன்னொரு ரூ.4000 கூட வரப்போகுது.. முதல்வர் விஜய்யின் மாஸ் திட்டம்...

56 வயதில் இளைஞர் என ஏமாற்றி வரும் ராகுல் காந்தி.. பிரதமர் மோடி கிண்டல்...

அடுத்த கட்டுரையில்
Show comments