1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 12 மார்ச் 2015 (12:59 IST)

உலகக் கோப்பை: இலங்கை வீரர் மேத்யூஸ் காயத்தால் அவதி

இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், கால்இறுதி போட்டியில் விளையாடுவாரா என சந்தேகம் எழுந்துள்ளது.
 
11 ஆவது உலகக் கோப்பை போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்கேற்ற போது இலங்கை கேப்டன் மேத்யூசுக்கு கணுக்காலுக்கு அருகில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்எச்சரிக்கை ஏற்பாடாக கேப்டன் மேத்யூஸ் களத்தில் பீல்டிங் செய்யவில்லை. பேட்டிங்கில் மட்டும் பங்கேற்று அரைசதம் விளாசியிருந்தார். 
 
இந்நிலையில் இதுகுறித்து மேத்யூஸ் கூறுகையில், காயம் குறித்த தன்மையை அறிய ஸ்கேன் செய்ய உள்ளோம். மேலும் வரும் போட்டிகளில் விளையாடவே விரும்புகிறேன் என்றார். ஒருவேளை காயம் தீவிரமாக இருந்தால் மேத்யூஸ் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலக நேரிடும் என்பதால் இனி வரும் உலகக் கோப்பை போட்டிகளில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாக உள்ளது.