அர்ஷ்தீப் சிங்குக்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (09:06 IST)
பாகிஸ்தான் முன்னாள் வீரர் அர்ஷ்தீப் சிங் சமீபகாலமாக சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவது குறித்து வாசிம் அக்ரம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை சமூக வலைதளத்தில் மதரீதியாக விமர்சனம் செய்யப்பட்டார்.

போட்டியில் ஆசிப் அலியின் கேட்சை முக்கியமான கட்டத்தில் அர்ஷ்தீப் சிங் தவறவிட்டார். இதனால் போட்டியின் முடிவே மாறியது. இதனை அடுத்து ரசிகர்கள் அவர் மீது கடும் கோபம் கொண்டு கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு சிலர் அவரை மதரீதியாக டுவிட்டரில் விமர்சனம் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். அதில் “ அவர் ஒரு இளம்  வீரர். இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாட உள்ளார். ஆனால் அவரை சொந்த தேச மக்களே விமர்சிப்பது எனக்கு குழப்பமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

35 வருடங்களுக்கு பின் சீக்கிரம் வெளியேறிய பிரேசில் அணி.. விரக்தியில் ஓய்வு பெற்ற நெய்மார்...

அதிக சேம் சைடு கோல்கள்.. 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மோசமான சாதனை..!

ஒரு பெருமைமிகு சாதனை.. ஒரு மோசமான சாதனை.. வைபவ் சூர்ய வன்ஷியின் அறிமுக போட்டியில் நடந்தது என்ன?

அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது இந்திய அணி.. தொடரையும் அயர்லாந்திடம் இழந்த சோகம்..

29 பந்துகளில் 94 ரன்கள்.. 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி...

அடுத்த கட்டுரையில்
Show comments